×

சத்திய மூர்த்தி பவனுக்கு பதில் காமராஜர் அரங்கில் வைக்கப்பட்ட வசந்த் குமாரின் உடல்… காரணம் இது தான்!

கொரோனா பாதிப்பால் கடந்த 10 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை நேற்று மாலை திடீரென கவலைக்கிடமானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில், நுரையீரலில் பாதிப்பால் அவரது உயிர் பிரிந்தது. எம்பி வசந்தகுமாரின் மரணம் காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

கொரோனா பாதிப்பால் கடந்த 10 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை நேற்று மாலை திடீரென கவலைக்கிடமானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில், நுரையீரலில் பாதிப்பால் அவரது உயிர் பிரிந்தது. எம்பி வசந்தகுமாரின் மரணம் காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து வசந்தகுமாரின் உடல் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர், அவர் முதன்முதலாக ஆரம்பித்த வசந்த் & கோ கடைக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவரது உடைலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லையாம். அதனால் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்குக்கு வசந்தகுமாரின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பல அரசியல் பிரமுகர்கள் வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.