பொது மக்கள் மத்தியில் மதிப்பு உயர வேண்டும்! – ஈரோடு போலீசாருக்கு டி.ஐ.ஜி அறிவுரை
பொது மக்கள் மத்தியில் போலீசாரின் மதிப்பு உயரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஈரோடு காவல் துறையினருக்கு கோவை சரக டி.ஐ.ஜி நரேந்திரன் நாயர் அட்வைஸ் செய்துள்ளார்.
போலீசார், புகார் தெரிவிக்க வரும் மக்களை நல்ல முறையில் நடத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் புகார்களைக் கனிவுடன் கேட்டு குறைகளைத் தீர்க்க வேண்டும். போலீசார், பொது மக்களிடம் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நெருக்கடியான காலத்தில் பொது மக்கள் மத்தியில் காவல் துறையின் மதிப்பு உயரும் வகையில் போலீசார் பணியாற்ற வேண்டும்” என்றார்.