×

சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சரானவர் எடப்பாடி : – உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் மருத்துவக் கல்வி கட்டணம் குறைக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து திருப்தியாக உள்ளது. நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அதிகரித்துள்ளது. அடுத்த முதல்வர் மு.. ஸ்டாலின் தான். மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை விரட்டி அடித்தது போல சட்டமன்ற தேர்தலிலும் , அவர்கள் கூட்டணியை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின்
 

திமுக ஆட்சிக்கு வந்ததும் மருத்துவக் கல்வி கட்டணம் குறைக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து திருப்தியாக உள்ளது. நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அதிகரித்துள்ளது. அடுத்த முதல்வர் மு.. ஸ்டாலின் தான். மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை விரட்டி அடித்தது போல சட்டமன்ற தேர்தலிலும் , அவர்கள் கூட்டணியை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறினார்.

நான் கூறுகிறேன் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மருத்துவக் கல்வி கட்டணம் குறைக்கப்படும். மக்களை சந்திக்க திமுக எப்போதும் பயந்தது இல்லை. அதிமுக அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர், அவர்களை பார்த்து பயந்து ஓடும் நிலையில் தான் அதிமுக அரசாங்கம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை . அவர் சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சரானார். ஜெயலலிதா, சசிகலா இருவருக்குமே அவர் உண்மையாக இல்லை. தொண்டர்கள் அனைவரும் கட்சி கூட்டத்திற்கு வந்தோம் போனோம் என்று இல்லாமல் அதிமுக அரசின் ஊழல்களை அவர்களின் குறைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்”என்றார்.