×

சூரப்பா தன்னிச்சையாக செயல்படுவதை அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது – டிடிவி தினகரன்

அண்ணா பல்கலைக் கழகமும் அரசும் மோதல் போக்கை கடைபிடிப்பது வருத்தம் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உயர்புகழ் கல்வி அந்தஸ்து கோரி துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் மூலம் 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாவதால், சூரப்பா என்ன முதல்வரா? என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதற்கு விளக்கம் அளித்த சூரப்பா, தான் தன்னிச்சையாக செயல்படவில்லை என்றும் அரசிடம் கேட்டே செயல்படுவதாகவும் கூறினார். இந்த நிலையில் இந்த
 

அண்ணா பல்கலைக் கழகமும் அரசும் மோதல் போக்கை கடைபிடிப்பது வருத்தம் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உயர்புகழ் கல்வி அந்தஸ்து கோரி துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் மூலம் 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாவதால், சூரப்பா என்ன முதல்வரா? என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதற்கு விளக்கம் அளித்த சூரப்பா, தான் தன்னிச்சையாக செயல்படவில்லை என்றும் அரசிடம் கேட்டே செயல்படுவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் உயர்கல்வி அடையாளங்களில் முக்கியமானதாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘உயர் புகழ் கல்வி நிறுவனம்’ என்ற அந்தஸ்தை வழங்கும் விஷயத்தில் மாநில அரசும் துணை வேந்தர் சூரப்பாவும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலையளிக்கிறது.

அந்த அந்தஸ்தை வழங்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என்று எழுத்துபூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த நிலையில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.