சங்கிலி தொடராய் சாத்தான் குளம் சம்பவம் -திருச்சியில் முதியவர் மீது போலீஸ் தாக்கு -வைரல் வீடியோவால் மீண்டும் பரபரப்பு ..
திருச்சியில் மீண்டும் சாத்தான்குளம் சம்பவம் போல ,போலீசாரால் ஒரு முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது . திருச்சியில் உள்ள எம்ஜிஆர் ரவுண்டானா அருகே இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்தது.
திருச்சி மாவட்டம் பேரையூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் இளங்கோ என்ற தலைமை காவலர் திங்களன்று காலையில் எம்ஜிஆர் ரவுண்டானா அருகே ஒரு முதியவருடன் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு அவரை கடுமையாக தாக்கினார் .இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது
45 விநாடிகள் கொண்ட அந்த வைரலாகும் வீடியோவில், இளங்கோ என்ற அந்த போலீஸ், சைக்கிளில் செல்லும் ஒரு முதியவரோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ,பிறகு அவரை கடுமையாக தாக்கும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது .