×

திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் செந்தில் கைது!

திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம் மர்ம நபர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். சோமரசம்பேட்டை போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கங்காதேவியின் உடல் முட்புதரில் கிடப்பதாக முதலில் உறவினர்கள் செந்தில் மற்றும் சசிகுமார் ஆகியோர் கூறியுள்ளனர். அவர்களிடம் விசாரணை
 

திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம் மர்ம நபர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். சோமரசம்பேட்டை போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கங்காதேவியின் உடல் முட்புதரில் கிடப்பதாக முதலில் உறவினர்கள் செந்தில் மற்றும் சசிகுமார் ஆகியோர் கூறியுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அண்ணன் முறையான செந்திலுக்கும் கங்காதேவிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் செந்தில் தனது நெஞ்சில் கங்காதேவியின் பெயரை பச்சை குத்தியிருக்கிறார். அவருடன் கங்காதேவி நீண்ட நாட்களாக செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அப்போது, கங்கா தேவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் செந்தில் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.