×

சென்னை கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இன்னும் சில நாட்களில் 2021 ஆம் ஆண்டு பிறக்க போகிறது. 2020 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே கொரோனா காரணமாக இயல்பு நிலையை இழந்து பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் வரும் வருடத்தை மக்கள் வரவேற்க பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள
 

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

இன்னும் சில நாட்களில் 2021 ஆம் ஆண்டு பிறக்க போகிறது. 2020 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே கொரோனா காரணமாக இயல்பு நிலையை இழந்து பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் வரும் வருடத்தை மக்கள் வரவேற்க பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையிலுள்ள மேம்பாலங்கள் நாளை இரவு மூடப்படும் என்றும் உணவகங்கள் 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை என்று ம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர்.