×

தமிழகத்தில் நாளை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் : தொற்று அதிகரிப்பால் மீண்டும் முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா?

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 5-7-2020, 12-7-2020, 19-7-2020 மற்றும் 26-7-2020 ஆகிய தேதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5,12,19 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது.
 

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 5-7-2020, 12-7-2020, 19-7-2020 மற்றும் 26-7-2020 ஆகிய தேதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5,12,19 ஆகிய தேதிகளில்  முழு ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது.

இந்நிலையில், இம்மாதத்தின் கடைசி  ஞாயிறான நாளை, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே நாளை இயங்கும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும். இதேபோல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்கள் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்ததாக என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.