தமிழகத்தில் மேலும் 5,127பேருக்கு கொரோனா, 91பேர் பலி
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3கோடியே 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 93ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,127 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,904பேர் ஆண்கள், 2,223பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24லட்சத்து 65ஆயிரத்து 874ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 801ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 271 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று 91பேர் உயிரிழந்துள்ளார். 27பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 64பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 290ஆக அதிகரித்துள்ளது. இன்று 7,159பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,90,783ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.