×

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த 3 காவலர்கள் இடமாற்றம்!

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாற்றம் செய்து இருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17ம் தேதி அவரது சிலைக்கு பலரும் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். அந்த வகையில் கடலூர் அண்ணா பாலம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு புது நகர் காவல்நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனால் இதற்கான புகைப்படங்களை தங்கள் சமூக
 

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாற்றம் செய்து இருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை பெரியார் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17ம் தேதி அவரது சிலைக்கு பலரும் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். அந்த வகையில் கடலூர் அண்ணா பாலம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு புது நகர் காவல்நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனால் இதற்கான புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். அப்போது அவர்கள் சீருடையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் மூன்று காவலர்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் , நிர்வாக காரணங்களுக்காக அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.