×

தூத்துக்குடி-காவலர் சுப்பிரமணியன் 16 வது நாள் நினைவு அஞ்சலி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் தூவி மரியாதை

தூத்துக்குடி தூத்துக்குடியில், ரவுடியை பிடிக்கச் சென்ற இடத்தில், வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் 16 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், நேரில் வருகை தந்து, காவலர் சுப்பிரமணியன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற காவலர்களும் திரளாக வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 

தூத்துக்குடி

தூத்துக்குடியில், ரவுடியை பிடிக்கச் சென்ற இடத்தில், வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் 16 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

காவலர் சுப்பிரமணியன்


தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், நேரில் வருகை தந்து, காவலர் சுப்பிரமணியன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற காவலர்களும் திரளாக வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக தென்மண்டல காவல்துறை சார்பில், காவலர் குடும்பத்துக்கு 86 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.