×

விசிக தலைவர் திருமாவளவனின் சகோதரி மரணம் : முதல்வர் பழனிசாமி இரங்கல்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வைரஸ் தொற்று பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்த கொடிய வகை கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி பானுமதியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது
 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வைரஸ் தொற்று பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்த கொடிய வகை கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி பானுமதியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல அரசியல் தலைவர்கள் பானுமதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் பழனிசாமி பானுமதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் சகோதரி திருமதி.பானுமதி என்கிற வான்மதி அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.