×

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியிட்டது மகிழ்ச்சி- திருமாவளவன்

புதுச்சேரி முதல்வரை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து, புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவிப்புக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நன்றியை தெரிவித்தோம். தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்க ஆளுநர் காலம் தாழ்த்திய நிலையில் விடுதலை
 

புதுச்சேரி முதல்வரை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து, புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவிப்புக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நன்றியை தெரிவித்தோம். தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்க ஆளுநர் காலம் தாழ்த்திய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறியது போல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழகத்தில் சமீப காலமாக தலைவர்கள் சிலையில் காவி சாயம் பூசுவதும், மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டும் செயலில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைவர் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி தரம் தாழ்ந்த அரசியலை பாஜக செய்து வருகிறது. நாளை மறுநாள் நடக்கவிருந்த விசிக ஆர்ப்பாட்டம், மழையின் காரணமாக சென்னையில் மட்டும் நடைபெறும். மதுரை எய்ம்ஸ் குழு உறுப்பினர் சுப்பையா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம்” என தெரிவித்தார்.