×

அரக்கோணம் படுகொலை: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் – திருமாவளவன்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் தேர்தல் முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. அரக்கோணத்தில் தேர்தல் தகராறில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலா ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். முன்னதாக இந்தப் படுகொலை சம்பவத்தை கண்டித்து வரும் 10 ஆம்
 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் தேர்தல் முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அரக்கோணத்தில் தேர்தல் தகராறில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலா ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். முன்னதாக இந்தப் படுகொலை சம்பவத்தை கண்டித்து வரும் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.