ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: திணறும் தேனி மாவட்டம்!
தேனி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமாளிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திண்டாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது. இதில் 125 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு மருத்துவர்கள், வருவாய் இன்ஸ்பெக்டர், காவலர்கள், சிறைக் கைதி என்று பலரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனியில் திடீரென்று கொரோனா நோயாளிகள் அதிகரிக்க என்ன காரணம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஊரடங்கை மதித்து, அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும். வெளியூரிலிருந்து யாராவது ஊருக்கு வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். பிரதான சாலைகளைத் தவிர்த்து கிராம சாலைகள் வழியாக பலரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்கள் மூலமாக கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.