×

“விதவை பெண்ணுக்கு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபர்” அடித்துக் கொன்ற உறவினர்கள்!

மேட்டுப்பாளையம் அருகே விதவை பெண்ணிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபரை, உறவினர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் காரமடை பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், தனலட்சுமியின் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர், தன்னுடன் உறவுக்
 

மேட்டுப்பாளையம் அருகே விதவை பெண்ணிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபரை, உறவினர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் காரமடை பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், தனலட்சுமியின் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர், தன்னுடன் உறவுக் கொள்ள வருமாறு அழைத்திருக்கிறார். தொடர்ந்து, தனலட்சுமிக்கு செல்போனில் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தனலட்சுமி, தனது உறவினர்களிடம் இதனை பற்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை நேரில் அழைக்க திட்டமிட்டு, தனலட்சுமியை அவரிடம் பேச வைத்துள்ளனர். பின்னர், தனலட்சுமி வீட்டிற்கு வந்த நபரை அவரது குடும்பத்தினர் மடக்கி பிடித்து, மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் கோவை ரத்தனபுரி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்றும் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.