வேகமெடுக்கும் கொரோனா : மதுரையில் தொற்று பாதிப்பு 5,000-ஐ தாண்டியது!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் இன்றுகாலை நிலவரப்படி மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5009 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1111 ஆக உள்ள நிலையில் 3821 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை
Jul 8, 2020, 11:08 IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் இன்றுகாலை நிலவரப்படி மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5009 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1111 ஆக உள்ள நிலையில் 3821 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை மதுரை மாவட்டத்தில் 77 பேர் பலியாகியுள்ளனர். சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.