×

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் : நாளை ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களிடம் விசாரணை!

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. இதனை எதிர்த்து திமுக
 

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் சபாநாயகரால் எடுக்கப்படாமலிருந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை காலக்கெடு விதிக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்கள் வாக்களித்த விவகாரத்தில் சபாநாயகர் நாளை விசாரணை மேற்கொள்கிறார் . சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களிடம் காணொளி மூலம் விசாரணை மேற்கொள்கிறார் சபாநாயகர் தனபால். இதை தொடர்ந்தே இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.