நிறைவடைந்தது அக்னிநட்சத்திரம்! 6 இடங்களில் மட்டுமே வெயில் சதம்…
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நேற்று மழையுடன் நிறைவடைந்தது. இருப்பினும் சில் இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்று வெயில் 6 இடங்களில் சதமடித்து
May 29, 2020, 20:14 IST
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நேற்று மழையுடன் நிறைவடைந்தது. இருப்பினும் சில் இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்று வெயில் 6 இடங்களில் சதமடித்து உள்ளது. வேலூர் 104.5, சென்னை மீனம்பாக்கம் 104, திருச்சி 102.2, புதுச்சேரி 101.1, கடலூர் 100.5, கரூர் பரமத்தி 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.