×

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம் பெற்றோர்களின் மத்தியில் எழுந்துள்ளன. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது என்ற கேள்வியும் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தான் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம் பெற்றோர்களின் மத்தியில் எழுந்துள்ளன. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது என்ற கேள்வியும் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையும் இன்று முதல் தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை நடைபெறும் நாட்களிலேயே இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.