×

பரோட்டாவில் மாஸ்க் : நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உணவகம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4640 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு அரசும், தன்னார்வலர்களும் பல விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4640 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு அரசும், தன்னார்வலர்களும் பல விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள பிரபல உணவகத்தில் பரோட்டாவில் முகக்கவசம் செய்து விற்பனை செய்து வருவது பலரையும் கவர்ந்துள்ளது. இந்த பரோட்டா முகக்கவசம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.