செய்திவாசிப்பாளர் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
டி.வி செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல டி.வி செய்தி வாசிப்பாளர் வரதராஜன், தனக்குத் தெரிந்த ஒருவருக்கு நேர்ந்த கொரோனா அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முயற்சி செய்ததாகவும் ஆனால் படுக்கை இல்லை அழைத்து வராதீர்கள் என்று எல்லா மருத்துவமனைகளும் கைவிரித்ததாகவும் கூறியிருந்தார். மேலும், கொரோனா நமக்கு வராது என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள். மிகவும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியிருந்தார்.