×

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை கேட் அடுத்த செம்பரபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருக்கு குமாரி என்ற மனைவியும், ஆதித்யா, ஜெனி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு ராணுவப் பணியில் சேர்ந்த ஏகாம்பரம் ஓய்வு பெற இன்னும் 6 மாத காலம் உள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் நிலைதடுமாறி
 

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது.

காஞ்சிபுரம் வெள்ளை கேட் அடுத்த செம்பரபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருக்கு குமாரி என்ற மனைவியும், ஆதித்யா, ஜெனி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு ராணுவப் பணியில் சேர்ந்த ஏகாம்பரம் ஓய்வு பெற இன்னும் 6 மாத காலம் உள்ளது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து வீரர் ஏகாம்பரம் உடல் அவரது சொந்த ஊரான செம்பரம்பாக்கத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. செம்பரம்பாக்கத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. ராணுவ வீரர் ஏகாம்பரத்தின் மறைவால் செம்பரம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.