×

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்கள் உடல் சென்னை வந்தது!

ரஷ்யாவில் ஆற்றில் குளிக்கச் சென்று உயிரிழந்த நான்கு மாணவர்களின் உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரஷ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆசிப், சேலத்தைச் சேர்ந்த மனோஜ், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகியயோர் மருத்துவம் படித்து வந்தனர்.அவர்கள் விடுமுறையையொட்டி கடந்த 8ம் தேதி அங்குள்ள வோல்கா நதியில் குளித்த போது சுழலில் சிக்கி உயிரிழந்தனர். அவர் உடலை தமிழகம் கொண்டு வர அனைத்துக்
 

ரஷ்யாவில் ஆற்றில் குளிக்கச் சென்று உயிரிழந்த நான்கு மாணவர்களின் உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


ரஷ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆசிப், சேலத்தைச் சேர்ந்த மனோஜ், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகியயோர் மருத்துவம் படித்து வந்தனர்.
அவர்கள் விடுமுறையையொட்டி கடந்த 8ம் தேதி அங்குள்ள வோல்கா நதியில் குளித்த போது சுழலில் சிக்கி உயிரிழந்தனர். அவர் உடலை தமிழகம் கொண்டு வர அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தினர்.


பல்வேறு சட்ட போராட்டத்துக்குப் பிறகு 12 நாட்கள் ஆன நிலையில் அவர்கள் உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னையில் இருந்து உடல்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடலை தமிழகம் கொண்டு வர உதவிய முதல்வர், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு இறந்தவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.