×

ஆவடி அருகே பயங்கரம் – சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை பாடி டி.எம்.டி நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஷ்(20). இவர் சட்டக் கல்லூரி மாணவர். ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ஹரீஸ். அப்போது அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் ஹரீசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முரளி தனது நண்பர்கள் சண்முகவேல், வினோத், பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து ஹரியை அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த ஹரி கீழே விழுந்து மயங்கி இருக்கிறார். இதை எடுத்து முரளியும்
 

சென்னை பாடி டி.எம்.டி நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஷ்(20). இவர் சட்டக் கல்லூரி மாணவர். ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ஹரீஸ்.

அப்போது அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் ஹரீசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முரளி தனது நண்பர்கள் சண்முகவேல், வினோத், பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து ஹரியை அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த ஹரி கீழே விழுந்து மயங்கி இருக்கிறார்.

இதை எடுத்து முரளியும் அவரது நண்பர்களும் ஓடிவிட்டனர் பின்னர் ஹரிஷின் நண்பர்கள் பரிசை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்த திருமுல்லைவாயல் போலீசார் முரளி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.