×

‘தெலுங்கானாவிற்கு ரூ.10 கோடி நிதியுதவி’ முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை நன்றி!

தெலுங்கானாவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவின் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பெய்த கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 69 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தெலுங்கானாவுக்கு உதவும் பொருட்டு, தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.10 கோடி நிதியுதவி வழங்கினார். மேலும், வெள்ள நிவாரண பணியில் தெலுங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும்
 

தெலுங்கானாவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பெய்த கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 69 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தெலுங்கானாவுக்கு உதவும் பொருட்டு, தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.10 கோடி நிதியுதவி வழங்கினார். மேலும், வெள்ள நிவாரண பணியில் தெலுங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.

இந்த நிலையில் முதல்வர் நிதியுதவி அளித்ததற்கு நன்றி தெரிவித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.