×

ஆடு மேய்ப்பவரின் மகன் நீட் தேர்வில் சாதனை!

தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் மாணவர் ஜீவித்குமார் நீட் தேர்வில் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆடு மேய்த்துவரும் நாராயணசாமி என்பவரின் மகன் ஜீவித்குமார் நீட் தேர்வில் சாதனைப்படைத்துள்ளார். ஆசிரியர்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி மூலம் ஓராண்டு பயிற்சி பெற்ற ஜீவித்குமார் முதல் தமிழகத்திலேயே முதல்
 

தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் மாணவர் ஜீவித்குமார் நீட் தேர்வில் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆடு மேய்த்துவரும் நாராயணசாமி என்பவரின் மகன் ஜீவித்குமார் நீட் தேர்வில் சாதனைப்படைத்துள்ளார். ஆசிரியர்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி மூலம் ஓராண்டு பயிற்சி பெற்ற ஜீவித்குமார் முதல் தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றார்.

செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகின. தமிழகத்தில் கடந்த ஆண்டு 48.57 % சதவீதமாக இருந்த நீட் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 57.44% ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல் திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 8வது இடமும் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் முதல் 40 இடங்களில் ஸ்ரீஜன் மட்டுமே இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.