“உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் ” -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..
ஒரு கொரோனா வைரஸ் நோயாளி தன்னைச் சுற்றியுள்ளவர்களால் ஒதுக்கி வைக்கப்படுவதும் ,நோயாளிகளின் உடல்கள் சாலையிலும், மருத்துவமனைகளிலும் அவர்களது உறவினர்களால் கைவிடப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் வேலூரில் கொரானாவிலிருந்து குணமான ஒரு மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமையும் அரங்கேறியுள்ளது .
பிறகு ஜூலை 12ம் தேதி கொரானா சிகிச்சை முடிந்து குணமான பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார் .
ஆனால் எங்களிடம் வீட்டை மாற்றி வேறு இடத்திற்கு போவதற்கு வசதியில்லை என்று அவர்கள் கூறியும் ஊர்க்காரர்கள் கொடுமை படுத்தியதால், மனம் நொந்த மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார் .
இந்த புகாரை கேட்ட திருப்பத்தூர் கலெக்டர் எம்.பி. சிவன் அருள், மூதாட்டியின் குடும்பத்திற்கு முறையான உதவிகளை வழங்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார் .