×

“தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3ல் மதுரை வர வேண்டும்” : மு.க.அழகிரி அழைப்பு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் அரசியல் நகர்வு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி இருக்கும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர் மு.க.அழகிரி. இவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மீண்டும் களம் காண முனைப்பு காட்டி வருகிறார். திமுக தலைமை பதவி ஸ்டாலினை சென்று அடைய, மகனுக்கு திமுகவில் உரிய பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்து வருகிறார். இதனால் தனிக்கட்சி
 

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் அரசியல் நகர்வு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி இருக்கும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர் மு.க.அழகிரி. இவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மீண்டும் களம் காண முனைப்பு காட்டி வருகிறார். திமுக தலைமை பதவி ஸ்டாலினை சென்று அடைய, மகனுக்கு திமுகவில் உரிய பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்து வருகிறார். இதனால் தனிக்கட்சி தொடங்கும் அளவிற்கு சென்றுள்ளாராம் அழகிரி.

முதலில் இவர் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில் அதை மறுத்த அழகிரி தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று கூறினார். இதை தொடர்ந்து நேற்று அழகிரி கோபாலபுரத்திற்கு வருகை புரிந்தார். அங்கு தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த அவர் செய்தியாளர் சந்திப்பில், திமுகவுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3 இல் மதுரை வரவேண்டும் என மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். வருங்கால அரசியல் நடவடிக்கை பற்றி ஆதரவாளர்களுடன் ஜனவரி 3 ஆலோசனை நடத்துகிறார் அழகிரி. ஜனவரி 3இல் பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலஸில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துவதாக அழகிரி தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.