×

காரில் திடீர் தீ விபத்து : சென்னை தலைமை செயலகத்தில் பரபரப்பு!

சென்னை தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் பின்புறம் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீரென தீ பிடித்துள்ளது. காரில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு பதற்றமடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ அணைக்கப்படுவதற்கு உள்ளாகவே காரின்
 

சென்னை தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் பின்புறம் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீரென தீ பிடித்துள்ளது. காரில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு பதற்றமடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ அணைக்கப்படுவதற்கு உள்ளாகவே காரின் முன் பக்கம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதனிடையே, போலீசார் அந்த இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீப்பற்றி எரிந்த கார் யாருடையது என்ற விவரங்கள் தெரியவரவில்லை. இது எதிர்பாராமல் நேர்ந்த விபத்தா? அல்லது திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.