×

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

எண்ணூரில் கடலில் நண்பருடன் குளித்து விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் எட்வின் (வயது 17) அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), எட்வினும், நந்தகுமாரும் மோட்டார் சைக்கிளில் எண்ணூர், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கடற்கரைக்கு வந்தனர். பின்னர் கடலில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில்
 

எண்ணூரில் கடலில் நண்பருடன் குளித்து விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் எட்வின் (வயது 17) அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), எட்வினும், நந்தகுமாரும் மோட்டார் சைக்கிளில் எண்ணூர், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கடற்கரைக்கு வந்தனர். பின்னர் கடலில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை பள்ளி மாணவன் எட்வினை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே நந்தகுமார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டார். மீனவர்கள் கடலுக்குள் குதித்து தத்தளித்த மாணவனை கரைக்கு கொண்டு வந்தனர். அதற்குள் மாணவன் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.