×

பைக்கில் செல்லும் போது சுருண்டு விழுந்து இறந்த காவல் உதவி ஆய்வாளர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அறிவு குமார். 58 வயதான இவர் சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையில் சுருண்டு விழுந்ததாக தெரிகிறது. அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து
 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அறிவு குமார். 58 வயதான இவர் சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையில் சுருண்டு விழுந்ததாக தெரிகிறது.

அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் அறிவு குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே அவரின் திடீர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.