×

‘அப்பாவின் உடல்நிலை சீராக இருக்கிறது; அனைவரது பிரார்த்தனைக்கும் நன்றி’.. எஸ்.பிபி மகன் சரண் வீடியோ!

அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவும் கொரோனா வைரஸால், இசை ஜாம்பவானான எஸ்பி.பாலசுப்பிர மணியமும் பாதிக்கப்பட்டார். கடந்த 5 ஆம் தேதி இவருக்கு தொற்று உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. குறிப்பாக, எஸ்.பிபியிடம் இருந்து எவராலும்
 

அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவும் கொரோனா வைரஸால், இசை ஜாம்பவானான எஸ்பி.பாலசுப்பிர மணியமும் பாதிக்கப்பட்டார். கடந்த 5 ஆம் தேதி இவருக்கு தொற்று உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. குறிப்பாக, எஸ்.பிபியிடம் இருந்து எவராலும் பிரிக்க முடியாத, ஆருயிர் நண்பனான இளையராஜா மிகுந்த வருத்தமடைந்தார். ‘நம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது..உனக்காக காத்திருக்கிறேன்.. சீக்கிரம் எழுந்து வா பாலு’ உருக்கமாக பேசிய இளையராஜா அதனை வீடியோவாக வெளிட்டிருந்தார். இது அனைவரது மனதையும் உருக்கிய நிலையில், இன்று நடிகர் ரஜினியும் எஸ்.பிபிக்காக வீடியோ வெளியிட்டிருந்தார். இசை அவரை நிச்சயம் மீட்டுக் கொண்டு வரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருவதால், மருத்துவமனையில் எஸ்.பிபியின் பாடல்கள் ஒலிக்க எஸ்.பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருக்கிறது என எஸ்.பிபியின் மகன் சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த எல்லாருக்கும் நன்றி என்றும் தந்தையின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.