×

தீவிர சிகிச்சை பிரிவில் சிவசங்கர் பாபா : தற்போதைய நிலை என்ன?

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் பாபா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவந்த சிவசங்கர் பாபா சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிபிசிஐடி போலீசார் வருவதை தெரிந்து கொண்டு டெல்லிக்கு தப்பி ஓடினார். இதையடுத்து அவர்
 

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் பாபா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவந்த சிவசங்கர் பாபா சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிபிசிஐடி போலீசார் வருவதை தெரிந்து கொண்டு டெல்லிக்கு தப்பி ஓடினார். இதையடுத்து அவர் அங்கு வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார் . இதை தொடர்ந்து சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று ராஜீவ் காந்தி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.அத்துடன் அவரின் உடல்நிலை தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமறைவான சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியை தீபா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் மீது சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக பள்ளியின் முன்னாள் மாணவியும் நாட்டிய கலைஞருமான சுஷ்மிதா நேற்றிரவு சிபிசிஐடி போலீ சாரால் கைது செய்யப்பட்டார்.