×

முறையான அனுமதி இன்றி இயங்கிவந்த இரண்டு மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல்!

நாட்றம்பள்ளி அருகே முறையான அனுமதி இன்றி இயங்கிவந்த இரண்டு மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு துணை ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வேட்டப்பட்டு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான மினரல் வாட்டர் கம்பெனி இயங்கிவந்தது. முறையாக அரசிடம் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் இயங்கிவருவதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து திருப்பத்தூர் சப் கலெக்டர் (பொறுப்பு) அப்துல் முனிர் சீல் மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல் வைத்தார். அதேபோல் புதுப்பேட்டை பகுதியில் இயங்கிவந்த மற்றொரு தனியார்
 

நாட்றம்பள்ளி அருகே முறையான அனுமதி இன்றி இயங்கிவந்த இரண்டு மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு துணை ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வேட்டப்பட்டு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான மினரல் வாட்டர் கம்பெனி இயங்கிவந்தது. முறையாக அரசிடம் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் இயங்கிவருவதாக புகார் எழுந்தது.

புகாரையடுத்து திருப்பத்தூர் சப் கலெக்டர் (பொறுப்பு) அப்துல் முனிர் சீல் மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல் வைத்தார். அதேபோல் புதுப்பேட்டை பகுதியில் இயங்கிவந்த மற்றொரு தனியார் மினரல் வாட்டர் கம்பெனிக்கும் சீல் வைத்தார. இந்த நிகழ்வின் போது நாட்றம்பள்ளி தாசில்தார் சுமதி மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.