×

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது!

திருப்பூர் திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மதபோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் அங்குள்ள ஜெ.ஜெ. நகரில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். அப்போது, ஜெபக்கூட்டத்துக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கு, சாமுவேல் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்,
 

திருப்பூர்

திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மதபோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் அங்குள்ள ஜெ.ஜெ. நகரில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். அப்போது, ஜெபக்கூட்டத்துக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கு, சாமுவேல் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மதபோதகர் சாமுவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து, மதபோதகர் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவிக்கு, மதபோதகர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.