×

சாத்தான் குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்தது. இதற்கிடையில் சாத்தான்குளம் இரட்டை
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்தது. இதற்கிடையில் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக இன்று மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குள காவல்நிலையத்தில் பணியிலிருந்த எஸ்எஸ்ஐ பால்துரை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட மேலும் 5 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.