×

சேலம்மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் தீ விபத்து -5 பேர் பலி

சேலம் குரங்குசாவடி அருகே மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். லம் குரங்குசாவடி, நரசோதிபட்டி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மள மளவென பரவியதால், வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியாத நிலையில், தீயில் கருகி அன்பழகன் மனைவி புஷ்பா(40), சகோதரர் கார்த்திக்(40), கார்த்திக்
 

சேலம் குரங்குசாவடி அருகே மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

லம் குரங்குசாவடி, நரசோதிபட்டி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


தீ மள மளவென பரவியதால், வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியாத நிலையில், தீயில் கருகி அன்பழகன் மனைவி புஷ்பா(40), சகோதரர் கார்த்திக்(40), கார்த்திக் மனைவி மகேஸ்வரி(35), கார்த்திக்கின் மகன்கள் சர்வேஷ்(12), முகேஷ்(8) ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.