×

தினமலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- சேலத்தில் தேமுதிக நிர்வாகிகள் புகார்

ஆத்தூர் : தேமுதிக தலைவர் விஜயகாந்தை கார்ட்டூனாக சித்தரித்து அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் புறநகர் மாவட்ட தேமுதிக சார்பில் அக்கட்சியினர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார், செய்தி விபரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரை கேலி செய்யும் விதமாக கார்டூன் வெளியிட்டதாக தினமலர் நாளிதழுக்கு எதிராக, அந்த கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தினமலர் நாளிதழ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,
 

ஆத்தூர் : தேமுதிக தலைவர் விஜயகாந்தை கார்ட்டூனாக சித்தரித்து அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் புறநகர் மாவட்ட தேமுதிக சார்பில் அக்கட்சியினர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார்,

செய்தி விபரம்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரை கேலி செய்யும் விதமாக கார்டூன் வெளியிட்டதாக தினமலர் நாளிதழுக்கு எதிராக, அந்த கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமலர் நாளிதழ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,

காவல்நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் புறநகர் மாவட்டம் தேமுதிக சார்பில் ஆத்தூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் காவல் ஆய்வாளரிடம்

புகார் மனுவை அளித்தனர், இதில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஏ ஆர் இளங்கோவன், ஆத்தூர் நகர செயலாளர் சீனிவாசன் நரசிங்கபுரம் நகர செயலாளர் தமிழ்செல்வன் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் மாவட்ட மாணவரணி செயலாளர்

வேங்கை வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முருகன், அழகேசன் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயம் சுதாகர் ஆத்தூர் நகர துணை செயலாளர் ராஜேந்திரன் நகர நிர்வாகிகள் அருணாசலம்

மணிகண்டன் அண்ணா துரை ஜோதி துரை அப்பமசமுத்திரம் துணைத் தலைவர் காட்டு ராஜா அய்யர் மலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்