×

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு பாமக வரவேற்பு!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவச அரசு காப்பகம் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்
 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவச அரசு காப்பகம் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் . குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசு ஏற்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படு. ம் அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் அல்லது உறவினர் பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் தலா 3 ஆயிரம் உதவித்தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும். இவை அனைத்தும் ஒரு சிறப்பு குழுவால் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களுக்கு சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும்!

இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அதே பொருளாதார நெருக்கடி, வருவாய் ஈட்டும் ஒரு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும். எனவே, வருவாய் ஈட்டும் குடும்பத்தலைவரை இழந்த குழந்தைகளுக்கும் இதே உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்! “என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.