×

இயக்குநர் சங்கர்-லைகா இடையே பேச்சுவார்த்தை: நடுவராக ரிட்டையர்டு உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம்!

இயக்குநர் சங்கர் மீது லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சங்கர் இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்க சென்றுவிட்டார். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று கூறினார். இதை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி
 

இயக்குநர் சங்கர் மீது லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சங்கர் இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்க சென்றுவிட்டார். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று கூறினார்.

இதை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, தனி நீதிபதி முன்பு வழக்கை முடித்த பிறகு மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கலாம் என்று தெரிவித்தது. இந்நிலையில் அந்த வழக்கு நீதிபதி தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, லைகா நிறுவனம் சார்பாக இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீதிபதி, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை நடுவராக நியமித்து உத்தரவிட்டனர்.