மதுரையில் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு! – வணிகர்கள் சங்கம் முடிவு
மதுரையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வது என்று வியாபாரிகளாக முன்வந்து அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மதுரையிலும் ஊரடங்கை அறிவித்து பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசும் மதுரையில் ஊரடங்கை அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.