×

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : இந்த மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி ,ஈரோடு ,தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை ,சேலம் மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை
 

தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப சலனம் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி ,ஈரோடு ,தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை ,சேலம் மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகின்ற 28ம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர், திருப்பூர் ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் அதி கனமழையும், 29ம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர் ,திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் அதி கனமழையும், 30ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் அதி கனமழையும், திண்டுக்கல், தேனி ,விருதுநகர், மதுரை , ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

இன்று முதல் 30-ஆம் தேதி வரை கேரளக் கடலோரப் பகுதிகள், லட்ச தீவு பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.