டீக்கடைகள் மீண்டும் மூடல்… காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகள் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி! – தமிழக அரசு உத்தரவு
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நாட்களில் காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.