அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதையும் ஸ்டாலின் செய்யவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
தினமும் அறிக்கை விடுவதைத் தவிர தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேறு எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அ.தி.மு.க களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தி.மு.க வீட்டிலிருந்து அறிக்கை விடுகிறது. கொரோனாவை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது. கொரோனா காலத்தில் மக்களுக்கு அறிக்கைவிடுவதைத் தவிர்த்து ஸ்டாலின் வேறு எந்த சேவையையும் செய்யவில்லை” என்றார்.