×

இலங்கைக்கு கடத்தமுயன்ற ரூ.80 லட்சம் மதிப்பிலான மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டன் மஞ்சளை போலீசார் கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் வடக்குகடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை நாட்டுப்படகில் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நாட்டுப்படகை சோதனையிட்டபோது அதில் 73 மூட்டைகளில் சுமார் 2 டன் அளவிலான மஞ்சள் இருந்தது
 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டன் மஞ்சளை போலீசார் கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் வடக்குகடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை நாட்டுப்படகில் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்

கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நாட்டுப்படகை சோதனையிட்டபோது அதில் 73 மூட்டைகளில் சுமார் 2 டன் அளவிலான மஞ்சள் இருந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் ஆகும். இதனையடுத்து மஞ்சளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகையும் பறிமுதல் செய்த கியூபிரிவு போலீசார், கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.