ராமநாதபுரம்- ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறைக்கு ரோந்துபடகு வாங்க நிதி திரட்டும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் பிச்சை எடுக்கும்போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரை கண்டித்தும், அவர்களுக்கு பிச்சை எடுத்து ரோந்து படகு வாங்க நிதி திரட்டும் விமாகவும் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபடியாக, நேற்று, மாவட்ட கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் சிறுதொழில் மீனவ
Oct 22, 2020, 10:45 IST
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறைக்கு ரோந்துபடகு வாங்க நிதி திரட்டும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் பிச்சை எடுக்கும்
போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள்
மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரை கண்டித்தும், அவர்களுக்கு பிச்சை எடுத்து ரோந்து படகு வாங்க நிதி திரட்டும் விமாகவும் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபடியாக, நேற்று, மாவட்ட கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் சிறுதொழில் மீனவ சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நிதி திரட்டுனர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.