ரஜினிகாந்த் அனுமதியோடுதான் கேளம்பாக்கம் சென்றாரா? – விசாரணை நடத்தப்படும் என்று கமிஷனர் உறுதி
நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்கு உரிய அனுமதியோடு சென்றாரா என்பது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உரிய அனுமதியோடு ரஜினிகாந்த் சென்றாரா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா, சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா என்பது குறித்து விசாரணை செய்யப்படும்” என்றார்.