×

புதுச்சேரி- மனைவியின் நடத்தையில் சந்தேகம் – கத்தியால் குத்தி கொன்ற பள்ளி ஆசிரியர்

புதுச்சேரி புதுச்சேரி வேல்ராம்பட்டு திருமகள் நகரில் வசித்து வருபவர் விஜயன் (55). சுல்தான்பேட்டை, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (52), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் விஜயன் சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று கணவன்,
 

புதுச்சேரி

புதுச்சேரி வேல்ராம்பட்டு திருமகள் நகரில் வசித்து வருபவர் விஜயன் (55). சுல்தான்பேட்டை, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (52), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் விஜயன் சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


இந்த நிலையில், நேற்று கணவன், மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்து இருந்த விஜயன், மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். சாந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து, முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற விஜயன், மனைவியை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். சாந்தியின் உறவினர் பரணிகுமார் என்பவர் அளித்த புகாரின் அடிபடையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.