×

புதுச்சேரியில் கடந்த 5 மாதங்களில் இன்று முதல்முறையாக ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 5 மாதத்தில் முதல் முறையாக கடந்த 24மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகம் குறைந்த பாடில்லை. இருப்பினும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24மணி நேரத்தில் 177 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 131நபர்களுக்கும், காரைக்காலில் 24நபர்களுக்கும், ஏனாமில் 6நபர்களுக்கும், மாஹேவில் 16நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 4,277நபர்கள் சிகிச்சை
 

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 5 மாதத்தில் முதல் முறையாக கடந்த 24மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகம் குறைந்த பாடில்லை. இருப்பினும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24மணி நேரத்தில் 177 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 131நபர்களுக்கும், காரைக்காலில் 24நபர்களுக்கும், ஏனாமில் 6நபர்களுக்கும், மாஹேவில் 16நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 4,277நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 28, 290நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு 33,141ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்காத காரணத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 574 ஆகவே உள்ளது.